Thirukalukundram Arulmigu Vedhagiriswarar temple

Thirukalukundram.in

Thirukalukundram.in

ருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் -திருக்கழுக்குன்றம்




Arulmigu Vedhagiriswarar Temple - Thirukalukundram !!

இறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்  

இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்

இறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)  

தல மரம் : வாழை மரம் (கதலி)

தீர்த்தம் : சங்குத் தீர்த்தம்





63 நாயன்மார்கள்

63 நாயன்மார்கள்

Nayanmarkal







திருநாவுக்கரசு சுவாமிகள்:

சைவமும் தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர். புறச் சமய(சமணம்,பவுத்தம்) இருளை நீக்கிய வேளாளர். திருக்கோவில் உழவாரப்பணி செய்து தொண்டுபுரிந்தவர். 3,4,6 திருமுறைகளை அருளியவர்.

பெயர்: திருநாவுக்கரசு சுவாமிகள்
குலம்: வேளாளர்
பூசை நாள் : சித்திரை சதயம்
அவதாரத் தலம் : ஆமூர்
முக்தித் தலம் :

63 Nayanmarkal
தில்லைவாழ் அந்தணர்:

தில்லையில் நடராசப் பெருமானுக்கு வழிபாடு புரியும் அந்தணர்கள் 3000 பேர்.

பெயர்: தில்லைவாழ் அந்தணர்:
குலம்: அந்தணர்:
பூசை நாள் :
அவதாரத் தலம் : சிதம்பரம்
முக்தித் தலம் : சிதம்பரம்

திருநீலகண்டர்:

சிவனடியார்களுக்கு இலவசமாகத் திருவோடு கொடுத்து தொண்டு புரிந்த குயவர்.

பெயர்: திருநீலகண்டர்
குலம்: பாணர்
பூசை நாள் :தை விசாகம்
அவதாரத் தலம் : சிதம்பரம்
முக்தித் தலம் : தில்லைப்புலீச்சரம்

இயற்பகை நாயனார்:

யார் எது கேட்டாலும் இல்லை என்று கூறாமல் கொடுத்து தொண்டு செய்பவர். இறைவன் சோதித்த போது, தம் துணைவியாரையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர்.

பெயர்: இயற்பகை நாயனார்
குலம்: வணிகர்
பூசை நாள்:மார்கழி உத்திரம்
அவதாரத் தலம்:பல்லவனீச்சரம்
முக்தித் தலம்:சாய்க்காடு

இளையான்குடி மாறர்

வறுமையிலும், நள்ளிரவிலும் மாகேசுவர பூசை செய்து அடியார்க்கு அமுது அளித்த வேளாளர்..

பெயர்: மாறநாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள்: ஆவணி மகம்
அவதாரத் தலம்: இளையான்குடி
முக்தித் தலம்: இளையான்குடி

மெய்ப்பொருள் நாயனார்:

அடியார்கள் திருவேடத்தையே மெய்ப்பொருளாக எண்ணி, தன்னை கொன்றவரையே காத்தவர்.

பெயர்: மெய்ப்பொருள் நாயனார்:
குலம்: வேளாளர்
பூசை நாள் :
அவதாரத் தலம் : திருக்கோவலூர்
முக்தித் தலம் : திருக்கோவலூர்

விறன்மிண்ட நாயனார்:

தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர். இவரின் மூலமே சுந்தரர் திருத்தொண்டத்தொகை இயற்றி நமக்கு கிடைத்திட ஈசன் திருவுளம் கொண்டார்.

பெயர்: விறன்மிண்ட நாயனார்:
குலம்: வேளாளர்.
பூசை நாள் : செங்கண்ணூர்
அவதாரத் தலம் :
முக்தித் தலம் : ஆரூர்/வண்டாம்பாளை

அமர்நீதி நாயனார்:

அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்கு ஈடு செய்ய தம் மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பணம் செய்த வணிகர்..

பெயர்: அமர்நீதி நாயனார்
குலம்: வணிகர்
பூசை நாள்: ஆனி பூரம்
அவதாரத் தலம்: பழையாறை
முக்தித் தலம்: திருநல்லூர்

எறிபத்த நாயனார்:

சிவனடியார்கட்கு வரும் துன்பத்தை களைபவர். தன் கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியாரை துன்புறுத்திய பட்டத்து யானையைக் கொன்று சைவத்தை வளர்த்தவர்..

பெயர்: எறிபத்த நாயனார்ங
குலம்: அறியப்படவில்லை
பூசை நாள்: மாசி ஹஸ்தம்
அவதாரத் தலம்: கருவூர்
முக்தித் தலம்: கருவூர்

ஏனாதிநாத நாயனார்:

வாள்வித்தை பயிற்றுவிக்கும் ஆதிசூரனோடு யுத்தம் செய்யும் போது, ஆதிசூரன் நெற்றியில் திருநீறு அணிந்திருக்கவே அவனைக் கொல்லாது விட, சிவபெருமான் அவரைத் தம் திருவடியில் சேர்த்தருளினார்..

பெயர்: ஏனாதி நாத நாயனார்
குலம்: சான்றார்
பூசை நாள்: புரட்டாசி உத்திராடம்
அவதாரத் தலம்: ஏனநல்லூர்
முக்தித் தலம்: ஏனநல்லூர்

கண்ணப்ப நாயனார் :

சிவனின் மீதுள்ள அளவற்ற அன்பினால், தம் கண்களையும் பறித்து ஈசனுக்குக் கொடுத்த வேடுவர்.

பெயர்: திண்ணன்
குலம்: வேடர்
பூசை நாள்: தை மிருகசீருஷம்
அவதாரத் தலம்: உடுப்பூர்
முக்தித் தலம்: திருக்காளத்தி

குங்கிலியக் கலயனார்:

நாள்தோறும் (வறுமை வந்தபோதும்) சிவனுக்கு குங்கிலியத் தூபமிட்ட மறையவர்..

பெயர்: கலயனார்
குலம்: அந்தணர்
பூசை நாள்: ஆவணி மூலம்
அவதாரத் தலம்: திருக்கடவூர்
முக்தித் தலம்: திருக்கடவூர்

அரிவாட்டாயர்:

நெல்லரிசியும் மாவடுவும் செங்கீரையும் கொண்டு தினமும் பூசை செய்பவர். ஓர் நாள் பூசைப் பொருட்கள் தவறித் தரையில் விழ, இன்று பூசை செய்ய வழியில்லையே என்று தம் கழுத்தறுக்க முயன்ற வேளாளர்..

பெயர்: தாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள் :தை திருவாதிரை
அவதாரத் தலம்:கணமங்கலம்
முக்தித் தலம்:கணமங்கலம்

ஆனாய நாயனார்:

பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலால் இசைத்து முக்தி பெற்ற யாதவர்..

பெயர் : ஆனாயர்
குலம்: இடையர்
பூசை நாள் :கார்த்திகை ஹஸ்தம்
அவதாரத் தலம் :திருமங்கலம்
முக்தித் தலம் :திருமங்கலம்

மூர்த்தி நாயனார்:

சந்தனக் கட்டை கிடைக்காதபோது தம் முழங்கையைத் தேய்த்து இறைவனுக்குக் காப்பிட்ட வணிகர்..

பெயர்: மூர்த்தி நாயனார்:
குலம்: வணிகர்
பூசை நாள் : ஆடி கார்த்திகை
அவதாரத் தலம் :மதுரை
முக்தித் தலம் : மதுரை

முருக நாயனார்:

தினமும் மலர் மாலைகள் தொடுத்து இறைவனை வழிபடும் திருத்தொண்டு செய்த மறையவர்.

பெயர்: முருக நாயனார்:
குலம்: அந்தணர்
பூசை நாள் : வைகாசி மூலம்
அவதாரத் தலம் : திருப்புகலூர்
முக்தித் தலம் : நல்லூர்ப் பெருமணம்

உருத்திர பசுபதியார்:

நாள் தோறும் திருவுருத்திர மந்திரங்களை ஓதி முத்தியடைந்த மறையவர்.

பெயர்: உருத்திர பசுபதி நாயனார்
குலம்: அந்தணர்
பூசை நாள்: புரட்டாசி அசுவினி
அவதாரத் தலம்: தலையூர்
முக்தித் தலம்: தலையூர்


திருநாளைப் போவார் (நந்தனார்)

பறையர் குலத்தில் தோன்றிய இவர், தில்லை சிதம்பரத்தில் சிவனின் கட்டளைப்படி தீக்குள் புகுந்து வேதியராகி முக்தியடைந்தவர்.

பெயர்: திருநாளைப் போவார் (நந்தனார் )
குலம்: புலையர்
பூசை நாள் : புரட்டாசி ரோகிணி
அவதாரத் தலம் : ஆதனூர்
முக்தித் தலம் : தில்லை

சண்டேசுவரர்:

சிவபூசைக்குரிய பாற்குடங்களை உதைத்த தமது தந்தையின் மீது வைக்கோலை வீச, அது மழுவாக மாறி அவரின் காலை வெட்டியது. தொண்டர்களுக்கெல்லாம் தலைவராகி சண்டீசர் பதவியை ஏற்ற மறையவர்.

பெயர்: விசாரசருமர்
குலம்: அந்தணர்
பூசை நாள்: தை உத்திரம்
அவதாரத் தலம்: திருசேய்ஞலூர்
முக்தித் தலம்: ஆப்பாடி

திருக்குறிப்புத் தொண்டர்:

தினமும் சிவனடியார்களின் ஆடைகளைத் துவைத்து அழுக்கு நீக்கி தொண்டு செய்தவர்.

பெயர்:திருக்குறிப்புத் தொண்டர்:
குலம்: ஏகாலியர்.
பூசை நாள் : சித்திரை சுவாதி
அவதாரத் தலம் : திருக்கச்சி
முக்தித் தலம் : திருக்கச்சி

குலச்சிறை நாயனார்:

கூன்பாண்டிய மன்னனின் முதலமைச்சராக இருந்து சைவ நெறியைக் காத்தவர் .

பெயர்: குலச்சிறை நாயனார்
குலம்: மரபறியார்
பூசை நாள்: ஆவணி அனுஷம்
அவதாரத் தலம்:.மணமேற்குடி
முக்தித் தலம்: மதுரை

பெருமிழலைக் குறும்ப நாயனார்:

சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்.

பெயர்: பெருமிழலைக் குறும்ப நாயனார்:
குலம்: குறும்பர்
பூசை நாள் : ஆடி சித்திரை
அவதாரத் தலம் : மிழலை/ஆரூர்
முக்தித் தலம் : மிழலை/ஆரூர்

காரைக்காலம்மையார்:

சிவனருளால் இருமுறை மாயமாங்கனி பெற்றார். கயிலை மலையை கைகளால் நடந்து சென்ற போது சிவனே அம்மையே என்று அழைக்கப்பெற்றவர். அந்தாதி பாடி இசைத்தமிழுக்கும் சைவத்திற்கும் பங்களித்தார்.

பெயர்: காரைக்கால் அம்மையார்
குலம்: வணிகர்
காலம்: கி.பி. 300-500
பூசை நாள்: பங்குனி சுவாதி
அவதாரத் தலம்: காரைக்கால்
முக்தித் தலம்: திருவாலங்காடு

அப்பூதியடிகளார்:

திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதி பல்வேறு தொண்டுகள் புரிந்து சிவப்பேறு பெற்ற அந்தணர்..

பெயர் : அப்பூதியடிகள் நாயனார்
குலம் : அந்தணர்
பூசை நாள் :தை சதயம்
அவதாரத் தலம் :திங்களூர்
முக்தித் தலம் :திங்களூர்

திருநீல நக்க நாயனார்:

ஈசனின் திருமேனியில் விழுந்த சிலந்தியை வாயில் ஊதிய மனைவியை துறக்க முயன்றவர். திருஞானசம்பந்தரின் திருமணத்திற்கு புரோகிதம் பார்த்து தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.

பெயர்: திருநீல நக்க நாயனார்:
குலம்: அந்தணர்
பூசை நாள் : வைகாசி மூலம்
அவதாரத் தலம் : சாத்தமங்கை
முக்தித் தலம் : நல்லூர்ப் பெருமணம்

நமிநந்தியடிகள் நாயனார்:

தினமும் திருவாரூர் கோவிலில் விளக்கு ஏற்றுவதை தொண்டாக செய்து வந்தவர். ஓர் நாள், சமணர்கள் எண்ணெய் தர மறுத்தமையால், திருவருள் பெற்று குளத்து நீரைக்கொண்டே விளக்கு எரித்த மறையவர்.

பெயர்: நமிநந்தியடிகள் நாயனார்:
குலம்: அந்தணர்
பூசை நாள் : வைகாசி பூசம்
அவதாரத் தலம் : ஏமப்பேறூர்
முக்தித் தலம் : ஆரூர்

திருஞானசம்பந்தர்:

பார்வதி அம்மையே ஞானப்பால் அருளி சிவஞானம் பெற்றவர்; 1,2,3 திருமுறை பாடிச் சைவமும் தமிழும் தழைக்கச் செய்த மறையவர். பல அற்புதங்களை நிகழ்த்தி புறசமயம் அழிந்து சைவம் தழைக்க அருளியவர். .

பெயர்: திருஞானசம்பந்தர்:
குலம்: அந்தணர்
பூசை நாள் : வைகாசி மூலம்
அவதாரத் தலம் :
முக்தித் தலம் :

ஏயர்கோன்கலிக்காமர்:

சுந்தரர் சிவனைத் தூதனுப்பியதால் பகைத்து, பின் சுந்தரர் மூலம் சூலை நீங்கப்பெற்ற வேளாளர்.

பெயர்: கலிக்காம நாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள்: ஆனி ரேவதி
அவதாரத் தலம்: பெருமங்கலம்
முக்தித் தலம்: பெருமங்கலம்

திருமூல நாயனார்:

கயிலை திருநந்தியின் மாணவ சிவயோகியர், மூலன் உடலில் புகுந்து திருமந்திரம் பாடிய சித்தர்..

பெயர்: திருமூல நாயனார்:
குலம்: இடையர்.
பூசை நாள் : ஐப்பசி அசுவினி
அவதாரத் தலம் : சாத்தனூர்
முக்தித் தலம் : திருவாவடுதுறை

தண்டியடிகள்:

திருவாரூர்க் கமலாலயக் குளத்தை பிறவிக்குருடராக இருந்தும் திருத்தி தொண்டு செய்தவர்..

பெயர்: தண்டியடிகள்:
குலம்: செங்குந்தர்
பூசை நாள் : பங்குனி சதயம்
அவதாரத் தலம் : ஆரூர்
முக்தித் தலம் : ஆரூர்

மூர்க்க நாயனார்:

சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்த வேளாளர்.

பெயர்: மூர்க்க நாயனார்:
குலம்: வேளாளர்.
பூசை நாள் : கார்த்திகை மூலம்
அவதாரத் தலம் : வேற்காடு
முக்தித் தலம் : குடமூக்கு

சோமாசி மாற நாயனார்:

சிவ வேள்விகள் புரிந்து சுந்தரரை வழிபட்டுச் சிவபதம் அடைந்த மறையவர்.

பெயர்: சோமாசி மாற நாயனார்:
குலம்: அந்தணர்
பூசை நாள் : வைகாசி ஆயிலியம்
அவதாரத் தலம் : அம்பர்
முக்தித் தலம் :ஆரூர்

சாக்கிய நாயனார்:

புத்த சமயத்திலிருந்து சிவனை உணர்ந்து திரும்பி, பூக்கள் இல்லாத நிலையில், நாள் தோறும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து தமது சிவ பக்தியை வெளிப்படுத்தி சிவனருள் பெற்ற வேளாளர்.

பெயர்: சாக்கிய நாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள்: மார்கழி பூராடம்
அவதாரத் தலம்:திருச்சங்கமங்கை
முக்தித் தலம்: திருச்சங்கமங்கை

சிறப்புலி நாயனார்

திருவைந்தெழுத்து ஓதி, அடியவர்க்கு அமுதும், யாகங்களும் செய்து தொண்டுபுரிந்த மறையவர்.

பெயர்: சிறப்புலி நாயனார்
குலம்: அந்தணர்
பூசை நாள்: கார்த்திகை பூராடம்
அவதாரத் தலம்: ஆக்கூர்
முக்தித் தலம்: ஆக்கூர்

சிறுதொண்ட நாயனார்:

சிவனடியார் கேட்டதற்காக தம் பிள்ளையையே அரிந்து கறி சமைத்து அர்ப்பணித்து வழிபட்டவர்.

பெயர்: பரஞ்சோதியார்
குலம்: மாமாத்திரர்
பூசை நாள்: சித்திரை பரணி
அவதாரத் தலம்: திருச்செங்காட்டங்குடி
முக்தித் தலம்: திருச்செங்காட்டங்குடி

கழறிற்றறிவார்:

உவர்மண் பூசிய சலவைத் தொழிலாளியை சிவனாக வணங்கிய மன்னன் சேரமான் பெருமான்..

பெயர்: கழறிற்றறிவார் நாயனார்
குலம்: அரசர்
பூசை நாள்: ஆடி சுவாதி
அவதாரத் தலம்: கொடுங்கோளூர்
முக்தித் தலம்: திருவஞ்சை

கணநாதர்:

சீர்காழியில் தினமும் திருப்பணி செய்தும், ஞான சம்பந்தரை வழிபட்டும் தொண்டுபுரிந்த மறையவர்.

பெயர்: கணநாத நாயனார்
குலம்: அந்தணர்
பூசை நாள்: பங்குனி திருவாதிரை
அவதாரத் தலம்: காழி
முக்தித் தலம்: காழி

கூற்றுவ நாயனார்:

சபஞ்சாட்சரத்தை ஓதி, நடராசரின் திருவடியே தம் மணிமுடியாகப் பெற்று வழிபட்ட குறுநிலமன்னர்.

பெயர்: கூற்றுவ நாயனார்
குலம்: மன்னன்
பூசை நாள்: ஆடி திருவாதிரை
அவதாரத் தலம்: களப்பால்
முக்தித் தலம்: தில்லை

பொய்யடிமையில்லாத புலவர்:

சைவம், தமிழ் வளர்த்து, சிவனையே பாடிய சங்ககாலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்

பெயர்: பொய்யடிமையில்லாத புலவர்:
குலம்:
பூசை நாள் :
அவதாரத் தலம் :
முக்தித் தலம் :

புகழ்ச் சோழர்:

எறிபத்த நாயனாரை அணைந்து என்னையும் கொன்றருள்க என்ற அரசர். அதிகனுடைய போரில், தம் படையினர் வெட்டி கொணர்ந்த படைவீரர் தலை ஒன்று சடைமுடி தரித்திருப்பதை அறிந்து மனம் நொந்து தீப்புகுந்தவர். நரசிங்கமுனையரையர்: போலிச் சிவனடியாரிடமும் அன்பு காட்டி பொன் கொடுத்தும், தொண்டுபுரிந்த பெருந்தகையார்..

பெயர்: புகழ்ச் சோழர்:
குலம்: மரபறியார்
பூசை நாள் : ஆடி கார்த்திகை
அவதாரத் தலம் : உறையூர்
முக்தித் தலம் : கருவூர்

அதிபத்த நாயனார்

நாள் தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை(தங்கமீனையும்) இறைவனுக்குப்படைத்த மீனவர்.

பெயர் : அதிபத்த நாயனார்
குலம் : பரதவர்
பூசை நாள் :ஆவணி ஆயில்யம்
அவதாரத் தலம் :திருநாகை
முக்தித் தலம் :திருநாகை

கலிக்கம்ப நாயனார்:

தமக்கு பணிவிடை செய்தவரையும் வழிபட்டவர். கரகநீர் தரமறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்.

பெயர்: கலிக்கம்ப நாயனார்
குலம்: வணிகர்
பூசை நாள்: தை ரேவதி
அவதாரத் தலம்: திருப்பெண்ணாகடம்
முக்தித் தலம்: திருப்பெண்ணாகடம்

கலியநாயனார்:

தினமும் விளக்கெறித்து தொண்டு செய்து, வறுமையில் வாடி, ஓர் நாள் எண்ணை இல்லாத போது, தம் மனைவியையும் வாங்குவதற்கு எவருமின்றி, தமது ரத்தத்தால் விளக்கெரிக்க தமது கழுத்தை அரிய முயன்ற வணிகர்.

பெயர் : கலிய நாயனார்
குலம்: செக்கார்
பூசை நாள் : ஆடி கேட்டை
அவதாரத் தலம்: திருவொற்றியூர்
முக்தித் தலம் : திருவொற்றியூர்

சத்தி நாயனார்:

சிவனின் திருவடித்தாமரைகளை சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்பவர். சிவனடியார்களை இகழும் பாதகர்களின் நாவைத் தண்டாயம் என்னும் குறடுபோலும் கருவியால் இழுத்துக் கத்தியால் அரிந்த வேளாளர்.

பெயர்: சத்தி நாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள்: ஐப்பசி பூரம்
அவதாரத் தலம்: வரிஞ்சையூர்
முக்தித் தலம்: வரிஞ்சையூர்

ஐயடிகள் காடவர்கோன்:

ஆட்சியைத் துறந்து சிவத்தலங்களை வழிபட்டு க்ஷேத்ரத் திருவெண்பா நூலை இயற்றினார்.

பெயர்: ஐயடிகள் காடவர்கோன்
குலம்: குறுநில மன்னர்
பூசை நாள்: ஐப்பசி மூலம்
அவதாரத் தலம்: காஞ்சி

கணம்புல்ல நாயனார்:

சிவாலயத்தில் திருவிளக்கேற்றி வந்தார். வறுமை வரும் காலத்து, கணம்புல்லை விற்று நெய் வாங்கி தீபமேற்றினார். ஓர்நாள் நெய்யும் புல்லும் போதாமையால், தலைமயிரையே எரித்தார்.

பெயர்: கணம்புல்ல நாயனார்
குலம்: செங்குந்தர்
பூசை நாள்: கார்த்திகை கார்த்திகை
அவதாரத் தலம்: பேளூர்
முக்தித் தலம்: தில்லை

காரி நாயனார்:

“காரிக் கோவை” நூல் இயற்றி, மன்னர்களிடம் பொருள் பெற்று, சிவாலயங்கள் கட்டுவித்தார்.

பெயர்: காரி நாயனார்
குலம்: அந்தணர்
பூசை நாள்: மாசி பூராடம்
அவதாரத் தலம்: திருக்கடவூர்
முக்தித் தலம்: திருக்கடவூர்

நின்றசீர் நெடுமாறன்:

கூன் பாண்டியன் சமணத்திலிருந்து ஞானசம்பந்தரால் சைவத்திற்கு மாறி சைவத்தை வளர்த்தார்.

பெயர்: நின்றசீர் நெடுமாறன்:
குலம்: அரசர்.
பூசை நாள் : ஐப்பசி பரணி
அவதாரத் தலம் : மதுரை
முக்தித் தலம் : மதுரை

வாயிலார்:

சிவனுக்கு மனதிலேயே கோவிலமைத்து ஞானவிளக்கேற்றி அன்பு படைத்து ஞானபூசை செய்த வேளாளர். .

பெயர்: வாயிலார்:
குலம்: வேளாளர்
பூசை நாள் : மார்கழி ரேவதி
அவதாரத் தலம் :திருமயிலை
முக்தித் தலம் :

முனையடுவார் நாயனார்:

கூலிக்கு போர் செய்து திரட்டிய பொருளை அடியார்களுக்கு அருளி தொண்டுசெய்த வேளாளர்.

பெயர்: முனையடுவார் நாயனார்:
குலம்: வேளாளர்
பூசை நாள் : பங்குனி பூசம்
அவதாரத் தலம் : நீடூர்
முக்தித் தலம் : நீடூர்

கழற்சிங்க நாயனார்:

போரிட்டு வென்று சைவசமயம் தழைத்தோங்க செய்தார். ஓர்முறை, சிவாயலத்தில், பூ மண்டபத்திலிருந்த மலரை முகர்ந்து பார்த்த தம் மனைவியாரின் கையை வெட்டிய பல்லவ மன்னர்.

பெயர்: கழற்சிங்க நாயனார்
குலம்: குறுநில மன்னர்
பூசை நாள்: வைகாசி பரணி
அவதாரத் தலம்: திருக்கச்சி
முக்தித் தலம்: திருக்கச்சி

இடங்கழி நாயனார்:

சிவனடியார்களுக்குத் திருவமுது செய்ய இயலாத ஓர் சிவனடியார், நெற்கூட்டு கொட்டகையில் திருடி அகப்பட, தம் செல்வத்தையும், நெற்பண்டாரத்தையும் அவருக்குக் கொடுத்து அருளிய குறுநில மன்னர்.

பெயர்: இடங்கழி நாயனார்
குலம்: வேளிர்
பூசை நாள்: ஐப்பசி கார்த்திகை
அவதாரத் தலம்: கொடும்பாளூர்
முக்தித் தலம்: கொடும்பாளூர்

செருத்துணை நாயனார்:

கழற்சிங்க நாயனாரின் மனைவி, பூ மண்டபத்திலுள்ள மலரை முகர்ந்து பார்த்ததால், அவரின் மூக்கையறுத்த வேளாளர். இதன் பிறகே கழற்சிங்கர் தமது மனைவியின் பூ எடுத்த கையை வெட்டினார்.

பெயர்: செருத்துணை நாயனார்:
குலம்: வேளாளர்
பூசை நாள் : ஆவணி பூசம்
அவதாரத் தலம் : கீழ்த்தஞ்சை
முக்தித் தலம் : ஆரூர்

புகழ்த்துணை நாயனார்:

சிவாகம விதிப்படி தினமும் சிவனை அர்ச்சனை செய்துவந்தார். பஞ்சம் வந்த காலத்தில் சிவபெருமானின் திருவருளினால், தினமும் ஒவ்வொரு பொற்காசு பெற்று தொண்டுசெய்த ஆதிசைவர்.

பெயர்: புகழ்த்துணை நாயனார்:
குலம்: ஆதி சைவர்
பூசை நாள் : ஆவணி ஆயிலியம்
அவதாரத் தலம் : அரிசிற்கரைப்புத்தூர்
முக்தித் தலம் :

கோட்புலி நாயனார்:

சோழநாட்டின் சேனாதிபதி போருக்கு சென்ற காலத்திலே, சிவபெருமானுக்குப் படைப்பதற்காக தாம் சேமித்து வைத்த நெல்லை உண்ட சுற்றத்தார் அனைவரையும் கொன்று நேர்மையை நிலைநாட்டிய வேளாளர்.

பெயர்: கோட்புலி நாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள்: ஆடி கேட்டை
அவதாரத் தலம்: திருநாட்டியத்தான்
முக்தித் தலம்: திருநாட்டியத்தான்

பூசலார் நாயனார்:

மனதிலேயே கோவில் கட்டி சிவனைப் பிரதிட்டை செய்து, சிவன் எழுந்தருளப் பெற்ற மறையவர். .

பெயர்: பூசலார் நாயனார்:
குலம்: அந்தணர்.
பூசை நாள் : ஐப்பசி அனுஷம்
அவதாரத் தலம் : திருநின்றவூர்
முக்தித் தலம் : திருநின்றவூர்

மங்கையர்க்கரசியார்:

நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. சமணத்தில் உழன்ற மன்னரையும் நாட்டையும் காத்திட, திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து, தம் கணவரை சைவராக்கி, சைவத்தை மீட்டெடுத்த அரசியார்.

பெயர்: மங்கையர்க்கரசியார்:
குலம்: மரபறியார்-அரசர்
பூசை நாள் : சித்திரை ரோகிணி
அவதாரத் தலம் : பழையாறை (கீழப் பழையாறை)
முக்தித் தலம் : மதுரை

நேச நாயனார்:

சிவனடியார்களுக்கு உடை, கோவணம், கீள் முதலியன கொடுத்துக் காத்து தொண்டுபுரிந்த சாலியர்.

பெயர்: நேச நாயனார்:
குலம்: சாலியர்
பூசை நாள் : பங்குனி ரோகிணி
அவதாரத் தலம் : காம்பீலி
முக்தித் தலம் : ஆரூர்

கோச்செங்கோட் சோழ நாயனார்:

திருவானைக்கா மதில் பணி செய்து, எழுபது மாடக்கோவில்களைக் கட்டினார்.

பெயர்: கோச்செங்கணா சோழர்
குலம்: அரசன்
பூசை நாள்: மாசி சதயம்
அவதாரத் தலம்: திருவானைக்கா
முக்தித் தலம்: தில்லை.

சடைய நாயனார்:

சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தந்தை. திருநாவலூரில் ஆதிசைவ குலத்தில், சிவதொண்டு புரிந்தார்.

பெயர்: சடைய நாயனார்
குலம்: ஆதி சைவர்
பூசை நாள்: மார்கழி திருவாதிரை
அவதாரத் தலம்: திருநாவலூர்
முக்தித் தலம்: திருநாவலூர்

இசை ஞானியார்:

சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அன்னை. திருநாவலூரில் சிவதொண்டு புரிந்தார்..

பெயர்: இசைஞானியார்
பால்: பெண்
குலம் : ஆதி சைவர்
பூசை நாள்: சித்திரை சித்திரை
அவதாரத் தலம்: திருவாரூர்
முக்தித் தலம்: திருநாவலூர்

சுந்தர மூர்த்தி நாயனார்:

சிவனின் தோழராய், 7ம் திருமுறை திருப்பாட்டு பாடி செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்.

பெயர்: சுந்தரமூர்த்தி நாயனார்
குலம்: ஆதி சைவர்
பூசை நாள்: ஆடிச் சுவாதி
அவதாரத் தலம்: திருநாவலூர்
முக்தித் தலம்: திருநாவலூர்

மானக்கஞ்சாறன்:

தம்மகளின் நீண்டகூந்தலைத் திருமணத்தன்று சிவனடியாரின் பஞ்சவடிக்காக அரிந்தளித்த வேளாளர்.

பெயர்: மானக்கஞ்சாறன்:
குலம்: வேளாளர்
பூசை நாள் :மார்கழி சுவாதி
அவதாரத் தலம் : கஞ்சாறூர்
முக்தித் தலம் : கஞ்சாறூர்